சனி, 2 பிப்ரவரி, 2019

பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு

நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது.
ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்டுக்குடும்ப முறையொன்று இருந்தது என்றால் உங்களுக்கு சிலவேளை ஆச்சரியமாக இருக்கலாம்.1748 பேர் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்.; இவர்கள் இந்திய கூட்டுக் குடும்பங்களைப் போல நிர்ப்பந்தத்;தின் அடிப்படையில் வாழாமல் எல்லாரும் சமத்துவமான உரிமைகளோடு மனமொத்து கூட்டாக வாழந்தார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் பிரான்சின் இரண்டாவது நிர்வாகப்பிரிவான லென்(L’Asine) மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களான லோன் மற்றும் சென்ட் குயின்டன் ஆகிய நகரங்களுக்கிடையில் இருக்கும் கீஸ்(Guise) என்ற சிறு நகரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டுக்குடும்பம் இருந்தது.
fondation_godinஓரு சிறிய கோட்டையுடன் கூடிய இந்த நகரத்தில் இருந்த தொழில் அதிபரான Jean-Baptiste André Godin ஜோன் பப்ரிஸ்ட் ஆந்திரே கோடன் என்பவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு முறையாகும்.
வீடுகளுக்கான கணப்படுப்புகள் மற்றும் சமையல் அடுப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்த கோடன் அவரது சமகால தத்துவவாதிகளான ஹெகல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1846 ம் ஆண்டு தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கி அவர்களை கூட்டுக்குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணினார்.ஒரே கூரையின் கீழ் தொழிலாளர்களுக்கான வீடுகளை அமைப்பது.விளையாட்டு மைதானம் நீச்சல் தடாகம் நூலகம் சிறுவர்களுக்கான பாடசாலை வயது வந்த பிள்ளைகளுக்கான கல்லூரி வணிக வளாகம் வெதுப்பகம் ஆரம்ப சகாதார நிலையம் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தொழிலாளர்களே கூட்டாகச் சேர்ந்து அவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினார்.
Le familist_re de Guise _ _22_1859 ம் ஆண்டு தன்னுடைய எண்னத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அவர் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரும் தொடர்மாடிக் குடியிருப்புக்களை கட்டுவித்தார்.இந்த தொடர்மாடி குடியிருப்புகளின் சிறப்பம்சம் இது தமிழர்களுடைய நாற்சார் வீட்டு அமைப்பு முறையை ஒத்ததாக கட்டப்பட்டதாகும். நடுவில் பெரிய முற்றம்.அதை சூழ நான்கு பக்கமும் கட்டிடங்கள்.நான்கு மாடிகளை கொண்ட அந்தக் கட்டித்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களும் முற்றத்தை பார்ப்பது போலவே அமைக்கப்பட்டன.ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் வாசலுக்கு வந்து அனைவரையும் பார்க்கக் கூடிய விதத்தில் இந்த கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதியான சமையல் அடுப்புக்கள் விட்டு தளபாடங்கள் கணப்படுப்புகள் எல்லாம் வழங்கப்பட்டன.
பிள்கைளை பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகம் ஆரம்ப மருத்துவ நிலையம் ஆரம்ப பாடசாலை உயர் கல்லூரி உட்பட அனைத்தும் 1864 ம் அண்டளவில் நிறுவி முடிக்கப்பட்டன.1868 ம் ஆண்டு கணக்கின் படி 1748 வயது வந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தனர். அதே வருடம் கோடன் தனது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கும் உரிமையுள்ள ஒரு பொது நிறுவனமாக மாற்றினார்;.
தொழிற்சாலை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் ஒரு பொது அமைப்புக் கூடாக தொழிலாளர்களே நிர்வகித்ததுடன் அனைவருக்கும் சமமான வருமானத்தை சம்பளமாக எடுத்துக்கொண்டு மீதியுள்ள இலாபத்தை மீண்டும் அந்த பொது நிறுவனத்தின் கணக்கில் சேர்த்து அதை விரிவு படுத்தினர்.
GUISEபாரிசில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு நிகரான சமூகப்புரட்சியாக கோடனுடைய இந்த கூட்டுக் குடும்பத்திட்டம் கருதப்பட்டது.பல ஐரோப்பிய நாடுகளில் அடிமை முறையும் சமூக ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படாத-அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமையும் ஆண்களுக்கு நிகராக தொழில் செய்யும் உரிமையும் வழங்கப்படாத அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களை ஒரே குடும்பமாகவும் சமத்துவ மனிதர்களாகவும் மாற்றிய அவரது செயற்பாடு பிரெஞ்சு புரட்சியின் உன்னதமான கோட்பாடுகளான விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுக்கு அhத்தமும் வடிவமும் கொடுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டது.
1888 ம் ஆண்டு கோடான் மறைந்த பின்பு பிரான்சில் நடந்த உள்சாட்டு குழப்பங்களின் தாக்கமும் 20 ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் துறை போட்டி மற்றும் சந்தைக்கான போட்டி அதை தொடாந்து ஏற்பட்ட மதலாம் உலக யுத்தம் என்பவற்றால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவிழக்க ஆரம்பித்து.அடுத்த தலைமுறையில் வந்த பிள்ளைகள் உயர் கல்விகற்று வெளி வேலைகளுக்கு சென்றது, வெளியாரை திருமணம் செய்தது என்பவற்றால் பெருமளவுக்கு அந்த குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
கோடன் ஆரம்பித்து நடத்திய அந்த தொழிற்சாலை கூட இன்று அதே பெயரில் தனியார் நிறுவனமாகி கூட்டுக்குடும்ப பாரிம்பரியத்தை கொண்ட தயாரிப்பு என்ற அடையாளத்துடன் இன்றைய உலகமயமாதல் சந்தையில் தனது பொருட்களை
சந்தைப்படுத்தகிறது.
ஆயினும் இன்னும் பல குடும்பங்கள் தாங்கள் இந்த கூட்டுக் குடும்ப பாரம்பரித்தை சோந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக