ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

இதற்குப் பின்னால் இருப்பது யார்?

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதிகளவுக்குத் தீங்கு செய்த ஒரு அமைப்பு என்றால் அது ஈபிஆர்எல்எப் தான்.இந்திய இராணுவ காலகட்டத்தில் இந்த அமைப்பு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் காட்டிக் கொடுப்புக்கள் எண்ணில் அடங்காதவை. இவை ஈபிஆர்எல்எப் கடைப்பிடிப்பதாக ஆரம்பத்தில் சொல்லிக்கொண்ட பொதுவுடைமை கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.இவற்றை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இயங்கிய மண்டையன் குழு தான் செய்தது என்று சில ஈபிஆர்எல்எப் பெரிசுகள் கூறிவிட்டுத் தப்பிக்கப்பார்க்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டுதான் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையினான ஈபிஆர்எல்எப் இயக்கத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைக்க ஒத்துக்கொண்டார்கள்.
இப்போது தாங்கள் செய்த படுகொலைகளை,ஆட்கடத்தல்களை காட்டிக்கொடுப்புக்களை வசதியாக மறைத்துவிட்டு விடுதலைப்புலிகளின் தவறுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது.இதற்குப் பின்னால் இருப்பது யார்?முதலில் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டல்லவா மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.அது தானே புரட்சிகர அரசியல்.
ஈபிஆர்எல் உறுப்ப்pனர்களுக்கும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலருக்கும் தெரியாத உண்மை ஒன்று இருக்கிறது. தமிழீழ தேசியத்தலைவருக்கும்  ஈபிஆர்எல் தலைவர் பத்மநாபாவுக்கும் இடையில் 1984 வரை நல்ல புரிதல் இருந்தது.நபா அந்தக் காலத்தில் இந்திய நக்சல்பாரிகள் எனப்படும் புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார்.இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிரானவராக இருந்தார்.அவரை இந்திய அதிகர வர்க்கத்தின் வலையில் விழுத்தி இயக்க மோதல்களுக்குள் சிக்க வைத்தது பெருமாள்.நான் 1985ல் கும்பகோணத்தில் நாபாவை சந்தித்த போது இதை அவரிடமே கேட்டேன். 'தன்னுடைய விருப்புகள் வேறு.அமைப்பின் தலைவர் என்ற வகையின் அதன் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டுள்ளேன்' என்றார்.
1984 ல் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது நட்பின் அடையாளமாக நபாவுக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியிருந்தார் . இந்த நினைவுப் பரிசு பாண்டிபஜாரில் வாங்கப்பட்டது.அதை நாபா ஒரு பொக்கிசமாக கருதி தனது பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தார். இது முன்னணி ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களுக்குத் தெரியும்.இன்று அதைச் சொல்ல மாட்டார்கள்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

.இறைமை என்பது

ஒரு அதிகார மையத்தில் இருந்து இன்னொரு அதிகார மையத்துக்கு அதிகாரம் கை மாறவதற்குப் பெயர் சுதந்திரமல்ல.இறைமை என்பது கடவுளால் படைக்கப்பட்டதுமல்ல வானத்தில் இருந்து குதித்து வந்ததுமல்ல.ஒவ்வொரு தனிமனிதனதும் அவனால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பினதும் ,நிலம், மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் முதலானவற்றை உள்ளடக்கிய வாழ்வியல் இயங்கு தளத்தின் தொடர்ச்சியான நீண்ட நெடிய வரலாற்றில் இருந்து தோற்றம் பெற்றதே இறைமையாகும்..அந்த இறைமை என்பது மக்களுக்கானது..
அந்த இறமையை கையகப்படுத்தும் கைமாற்றும் உரிமை காலணித்துவவாதிகளுக்கோ. உள்ளுர் அதிகார வர்க்கத்துக்கோ கிடையாது.
அந்த வகையில் இலங்கைத்தீவில் வாழ்ந்த தழிழீழ மக்களுடைய இறைமையை சட்டவிரோமாக கைப் பற்றி அதை சட்டவிரேதமாக இன்னொரு அதிகாரவர்கத்துக்கு கைமாற்றம் செய்த நிகழ்வை எமது சுதந்திர தினமாக ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை அதைத சுதந்திரம் என்று நினைப்பவர்கள் நவீன அடிமைகளாயாகும்.இவர்கள் ஒரு எசமானால் வளாக்கப்பட்ட நாய், இன்னொரு எசமானிடம் ஒப்படைக்கப்பட நிலைக்கு சமமானவர்கள்.அந்த எசமானர்கள் வீசிஎறியும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக்கொண்டிருப்பது தான் இவர்களது சுதந்திரம் பற்றிய புரிதலாகும்..

சனி, 2 பிப்ரவரி, 2019

அந்தநாள் நினைவுகளுடன்......!

அந்தநாள் நினைவுகளுடன்......!
(இது கதையல்ல வரலாறு.இவை பதிவுக்கு உள்ளாக்கப்படவேண்டும் )
எனது தோழி ஒருத்தியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது,என்னை கண்டவள் ஓடிவந்து கட்டி அணைத்தாள்,
எப்படி இருக்கிறாய் என்றவள் அழத்தொடங்கினாள்,.அவள் இராணுவத்தில் சரணடைந்ததுகூட எனக்குத் தெரியாது.2008 ஆண்டு 9ஆம் மாதம் அளவில் அவளை இறுதியாக சந்தித்திருந்தேன்,அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா..?என்பதுகூட தெரியாமல் இருந்தேன்,
ஆனால் எங்கிருந்தாலும் அவள் நலமோடு இருக்கவேண்டும் என்று நினைப்பேன், பத்து வருடங்களின்பின் அவளை பார்க்கிறேன்,பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் சொல்லவா வேண்டும்..?அவளும் எப்போதும் என்னை நினைப்பாளாம் என்றுகூறி கலங்கினாள்,
எனக்கும் கவலையாக இருந்தது,நமக்கான நட்பு போர்க்களத்திலே அல்லவா உருவானது...? ஒவ்வொரு நொடியும் மரணத்தின் தறுவாயில் நின்று நாம் வாழ்ந்த காலங்களும் நேசங்களும்அவை.
இருவரும் சகஜநிலைக்கு திரும்பினோம்.எமது களசூழலில் நடந்த ஒரு சம்பவத்தை இருவரும் நினைவுபடுத்திக்கொண்டோம்.
ஆம் முகமாலை பகுதியில் 2006 ஆண்டு 8மாதம் 14 ஆம் திகதி சமாதான காலத்தின்பின் இராணுவத்தினருக்கும் எமக்கும் யுத்தம் மூண்டது,பல காவலரண்களில் நாம் நின்றிருந்தாலும் முகமாலை சண்டைலைன்பல சுவாரசிய சம்பவங்கள் தந்த இடம் என்றே சொல்லலாம்.அங்கு நடந்த சம்பவத்தையே நினைவுபடுத்திக்கொண்டோம்...
ஒரு காவலரனில் மூவர் நிற்போம்,இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் சரிசமமாக பகிர்ந்து மகிழ்வோம்,..என்னோடு கானகி,பாவரசி இருவரும் இருந்தார்கள்,இதில் கானகியின் குழப்படித் தனங்கள் சொல்லித்தீராதென்றே சொல்லலாம்.நன்றாக பயிற்சிகள் செய்வாள்,அதேபோல் கடமையை சரியாக செய்பவள்,ஆனால் அந்தளவுக்கு குழப்படி செய்வாள்.அவளால் தண்டனைகளுக்கு நமக்கு எப்போதும் குறைவிருக்காது,
இந்திய இராணுவத்தை இங்கிருந்து வெளியேறக்கோரி உண்ணா நோன்பிருந்து தாய்மண்ணிற்காக உயிர்நீத்த அன்னை பூபதி அம்மாவின் நினைவுநாள் வந்தது,வழமைபோன்று அவர் உயிர் நீத்த அன்று எமக்கு காலை உணவு வருவதில்லை,
அதனால் பசிதாங்க முடியாமல் இருப்போர் மற்றைய காவலரன்காறர்களிற்கு தெரியாமல் முதல்நாள் இரவு வரும் உணவினை எடுத்துவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவோம்,தெரிந்தால் நக்கலடிப்பார்கள்.அதனால் ஒழித்துவைத்து சாப்பிடுவோம்.அன்று இரவு உணவு எடுத்துவைக்க மறந்து விட்டோம்,மறுநாள் காலை சாப்பாட்டு நேரம் கடந்த பிறகே காலை உணவு வரமாட்டுது என்று தெரிந்தது,
பாவரசி பசி இருக்கமாட்டாள்,அன்றைக்கென்று அரகோரபசி எடுத்தது.சாப்பாடு இல்லாவிட்டால் கூடபசிப்பது வழமைதானே.என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு நானும் பாவரசியும் கானகியை லைனில் (காவலரனில்)விட்டிட்டு வெளிக்கிட்டோம்.
எங்கே போவது..?எங்கயாவது தேங்காய் மாங்காய் பார்த்து புறப்பட்டோம்.முகமாலை பகுதி தேங்காய்க்கு பஞ்சமில்லாத ஏரியா,ஆனால் எங்கட பிள்ளைகள் நின்றா சொல்லவா வேண்டும்..?பொச்சுமட்டை மட்டும் குவியலா கிடக்கும்,
சரி முன்பக்கம் போவம் என்றுபோனோம் சிறிது தூரத்தில் ஒரு மாமமரத்தில் நான்கைந்து மாங்காய்கள் இருப்பது தெரிந்தது,இருவரும் மாமரத்தில் ஏறிவிட்டோம்,
அக்கா உங்களுக்கு கண்தெரியிறேலயே.உங்களை யார் இதில ஏறச்சொன்னது..? என்று மாமரத்தில் இருந்து ஒரு குரல் வந்தது.அப்போதுதான் பார்த்தோம்.மேலே போராளி ஒருத்தன் வரிஉடையோட இராணுவத்தின் தொலைதூர நகர்வுகளை கண்காணிக்க(op) நிற்பதை.
அக்காக்கள் உங்களை யார் காவலரனை விட்டிட்டு முன்னுக்கு வரச்சொன்னது.நீங்கள் மரக்கொப்புகளை ஆட்ட ஆமி சினைப்பண்ண போறான்,அநியாயமா நான் சாகபோறன்,உங்களுக்கு அண்ணயிட்ட சொல்லிகுடுக்கிறன் பாருங்கோ என்று முழங்கினான்,
அடக்கடவுளே இது என்ன கொடுமையாகிடக்கு பசியில மாங்காய் ஆயவர இவன்ர புராணத்த தாங்க முடியாம இருக்கு,அதோட தன்ர பகுதி பொறுபாளருக்கு சொல்லபோறன் என்றுவேற சொல்றானே,இவன் தன்ர பகுதி பொறுப்பாளருக்கு சொன்னால் நம்ம பகுதி பொறுப்பாளர் கடும்விசுவாசிவேற அவள் கட்டாயம் நெருப்பெடுப்பாளே,
அவளுக்கு விடயம் தெரிஞ்சா கதை கந்தல்தான் என்று நினைத்துவிட்டு அவனுக்கு சொன்னன் அண்ண கொஞ்சம் பேசாம நிற்கிறீங்களே.சும்மா கத்திக்கொண்டு நிற்காம, மாங்காயை ஆஞ்சிட்டு இறங்குறம்,எங்கட பகுதி பொறுபாளருக்கு தெரியோனும் பிறகு தெரியும் உமக்கு எங்களபற்றி,தகடு(போட்டுக்கொடுக்க) வைக்கவென்றே இருங்கோ என்று வெருட்டினம்,வெருட்டினா விட்டிடுவான் என்று ஒரு நப்பாசையில்,
பாவிபயல் செத்த பாம்பை முழுவேகமா அடிச்சபோலகத்திக்கொண்டு நின்றான்,மனச்சாட்சி இல்லையோ என்றுவேற கேட்கிறானே,பாவரசி சொன்னால் ஆரபி இவன் கட்டாயம் நம்மள எங்கட பொறுபாளரிட்ட போட்டுக்கொடுக்காம விடமாட்டான்போல சரி இறங்கு போவம் என்றால்.இருவரும் மாமரத்தால் இறங்கி ஆய்ந்த நாலு மாங்காயையும் கொண்டு வந்திட்டம்.
காவலரன் வந்து கானகிக்கு விடயத்தை சொல்லிவிட்டு மாங்காயை கல்லில் குற்றி சாப்பிட்டோம்.எதுக்கும் மனசில ஒரு பயம் நம்ம மாட்டிவிடுறானோ தெரியாதென்று,அதேபோல சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு கருவி ஒலித்தது.
ஓடிச்சென்று வோக்கியை கையில் எடுத்தேன்,T4 லைனில 16 ஆவது பொயிசனா(காவலரனா) என்று கேட்டார்கள்,ஆம் என்றேன்,
தடியன் நம்மள போட்டுக்கொடுதிட்டான் என்று விளங்கியது,மூவரும் உடுப்பு வாக்குகளோட வேற ஆணி ஒன்று உங்கள் காவலரனுக்கு வருவார்கள் நீங்கள் மூவரும் பின்னுக்கு மெயினுக்கு வாங்கோ என்றது அந்த குரல்,
இனி என்ன போனா கிச்சினில சமையல்தானே.சிறிது நேரத்தில் மூவர் வர நாம் பணிஸ்மன்ல(தண்டனையில்)கிச்சினுக்கு சமைக்கதான் போறம் என்று நினைச்சுபோனம்,
மெயினுக்கு போனதும் பொறுப்பாளர் அம்மாடியோவ் 60 மல்ரிசெல்லும் ஒன்றாக போனபோள கத்தினாள்,உங்களுக்கு சாப்பாடுதானே முக்கியம் ,கடமையில அக்கறை இல்லை என்று தொடங்கினாள்,இனி என்ன செய்வது நம்மிலயும் பிழைதானே,ஆனால் நம்மள போட்டுக்கொடுத்த தடியனை அவன்ர பொறுப்பாளரிட்ட போட்டுக்கொடுக்கணும் என்று ஒரு சபதம் எடுத்தம்.
பத்துநாள் கிச்சின்ல தண்டனையாக நின்றம்,வாறபோறாவளேவேற மாங்காய் இருக்கா மாங்காய் இருக்கா என்று நக்கலடிச்சு உயிர எடுத்திட்டாளே,
தண்டனை முடிய பழைய பொய்சனுக்கு வந்து நமக்கு தண்டன் வாங்கித்தந்த தடியன்ர பெயரை அறிய எவளவு பாடுபட்டம்.சாப்பாட்டுக்கு வந்த கடலையை காயவச்சு தலைக்கு வைக்கிற எண்ணையைவிட்ட ஆமியின்ர சாப்பாட்டு பெட்டிக்க போட்டு பொரிச்சுப்போட்டு சொப்பினில போட்டுக்கொண்டுபோக அன்றைக்கு காவலரனில நம்மட எதிரி தடியனே நின்றான்.கடலையை கொடுக்கேல திருப்பிகொண்டுவந்து வச்சிட்டம்,
மீண்டும் இரண்டு மணித்தியாலம் கழிச்சுபோனம் ஆள் இல்ல,அதனால மற்ற இருவருக்கும் கொடுத்து நட்புறவோடு கதைச்சிட்டு வந்திட்டம்,தடியன்ர பெயர் மலரவன் என்று அறிஞ்சிட்டம்,
கொஞ்சநாள் பேசாமல் இருந்தோம்,ஆனால் சமையல் செய்ய உதவி செய்யும்போது பெரிய டாசர்(பானைகள்)கைகாலில் சுட்டு காயங்கள் இருந்தது,தண்டனை பெற்றதை மறக்கவும் முடியாம இருந்தது,
நாம் பொதுவான கிணறு ஒன்றில்தான் குளிக்கபோவோம்,காலையில் பெண்களும் மாலையில் ஆண்களும் குளிப்போம்,
நாம் காலையில் கிணற்றடிபோனபோது குப்பி(நஞ்சுமாலை) அடையாள தகடு இரண்டும் தடியில் கொழுவியபடி இருந்தது,குளிக்கும்போது கழற்றி வைத்துவிட்டு எடுக்க மறந்துபோய்விட்டார்கள். நாம் அதை எடுத்துவந்து வோக்கி எடுத்து தகட்டு இலங்கத்தை சொல்லிக் கேட்டோம்,
மலரவனின் தகட்டு இலக்கம் என்று கூறினார்கள்,வேறு யாருடையதாக இருந்தாலும் கொடுத்திருப்போம்,பிறகென்ன நம்மள மாட்டிவிட்ட எதிரியின்ர தகடு.குப்பி ஆச்சே விடுவோமா.?அதற்கிடையில் மலரவன் இன்னொருவனை தூதனுப்பியிருந்தான்,தனது குப்பி தகட்டை எடுத்தால் தரும்படி,அவர் துணிஞ்சு வரமாட்டார்,எங்கள மாட்டிவிட்டவர் எப்படி துணிஞ்சுவருவார்..?
அதோட அவனுக்கும் தெரியும் இவளுகள் தராளுகள் என்று, வாய்காற கூட்டம் மச்சான்,போனால் அவமானப்படனுமே தவிர,கடைசி வந்தாலும் இவளே தராலே,எதுக்கும் நீ போய் கேட்டுபார் மச்சான், தந்தால் வாங்கிவா அவளே கூடகதைச்சா விட்டிட்டுவா என்று தானாம் அனுபினவன்,
உங்கட அண்ணயிட்ட எவளவு இறங்கிபோனம் கேட்டவரே,எங்கள மாட்டிவிட்டவர்தானே..?பிறகென்ன தகடு,குப்பி தரேலாதாம் என்று போய் சொல்லும் என்று வந்தவனிடம் சொல்லிவிட்டோம்,
நானும் கானகியும் பேசாமல் விட்டாலும் பாவரசி மலரவனை மன்னிக்க தயார் இல்லை,
பிறகென்ன நம்மட பகுதி பொறுப்பாளருக்கு அறிவிச்சு.ஒப்படைத்தோம்,குப்பி தொலைத்தால் தண்டனையாக ஒரு மாதகிச்சின் செய்யவேண்டும்....
அவற்றையெல்லாம் இன்று நினைத்தால் சிரிப்பாகவும் கவலையாக உள்ளது.இன்று நினைக்கும்போது மலரவனிற்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருக்கக்கூடாது என்று தோன்றும்,ஆனால் அன்றைய காலங்கள் எமக்கு எல்லாமே ஜாலியா இருக்கும்.தண்டனைகளும் பெரிதாக தெரியாது,
அன்று போரில் பாவரசி மாவீரராகிவிட்டாள்,மலரவனும் அவன் தோழர்களும் இருக்கிறார்களோ இல்லையோ என்பது தெரியாது.போராட்டம் தந்த நினைவுகள் என்றும் எம்மனங்களில் நிழலாக தொடரும்....
--பிரபாஅன்பு--

பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு

நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது.
ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்டுக்குடும்ப முறையொன்று இருந்தது என்றால் உங்களுக்கு சிலவேளை ஆச்சரியமாக இருக்கலாம்.1748 பேர் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்.; இவர்கள் இந்திய கூட்டுக் குடும்பங்களைப் போல நிர்ப்பந்தத்;தின் அடிப்படையில் வாழாமல் எல்லாரும் சமத்துவமான உரிமைகளோடு மனமொத்து கூட்டாக வாழந்தார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் பிரான்சின் இரண்டாவது நிர்வாகப்பிரிவான லென்(L’Asine) மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களான லோன் மற்றும் சென்ட் குயின்டன் ஆகிய நகரங்களுக்கிடையில் இருக்கும் கீஸ்(Guise) என்ற சிறு நகரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டுக்குடும்பம் இருந்தது.
fondation_godinஓரு சிறிய கோட்டையுடன் கூடிய இந்த நகரத்தில் இருந்த தொழில் அதிபரான Jean-Baptiste André Godin ஜோன் பப்ரிஸ்ட் ஆந்திரே கோடன் என்பவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு முறையாகும்.
வீடுகளுக்கான கணப்படுப்புகள் மற்றும் சமையல் அடுப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்த கோடன் அவரது சமகால தத்துவவாதிகளான ஹெகல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1846 ம் ஆண்டு தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கி அவர்களை கூட்டுக்குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணினார்.ஒரே கூரையின் கீழ் தொழிலாளர்களுக்கான வீடுகளை அமைப்பது.விளையாட்டு மைதானம் நீச்சல் தடாகம் நூலகம் சிறுவர்களுக்கான பாடசாலை வயது வந்த பிள்ளைகளுக்கான கல்லூரி வணிக வளாகம் வெதுப்பகம் ஆரம்ப சகாதார நிலையம் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தொழிலாளர்களே கூட்டாகச் சேர்ந்து அவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினார்.
Le familist_re de Guise _ _22_1859 ம் ஆண்டு தன்னுடைய எண்னத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அவர் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரும் தொடர்மாடிக் குடியிருப்புக்களை கட்டுவித்தார்.இந்த தொடர்மாடி குடியிருப்புகளின் சிறப்பம்சம் இது தமிழர்களுடைய நாற்சார் வீட்டு அமைப்பு முறையை ஒத்ததாக கட்டப்பட்டதாகும். நடுவில் பெரிய முற்றம்.அதை சூழ நான்கு பக்கமும் கட்டிடங்கள்.நான்கு மாடிகளை கொண்ட அந்தக் கட்டித்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களும் முற்றத்தை பார்ப்பது போலவே அமைக்கப்பட்டன.ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் வாசலுக்கு வந்து அனைவரையும் பார்க்கக் கூடிய விதத்தில் இந்த கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதியான சமையல் அடுப்புக்கள் விட்டு தளபாடங்கள் கணப்படுப்புகள் எல்லாம் வழங்கப்பட்டன.
பிள்கைளை பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகம் ஆரம்ப மருத்துவ நிலையம் ஆரம்ப பாடசாலை உயர் கல்லூரி உட்பட அனைத்தும் 1864 ம் அண்டளவில் நிறுவி முடிக்கப்பட்டன.1868 ம் ஆண்டு கணக்கின் படி 1748 வயது வந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தனர். அதே வருடம் கோடன் தனது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கும் உரிமையுள்ள ஒரு பொது நிறுவனமாக மாற்றினார்;.
தொழிற்சாலை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் ஒரு பொது அமைப்புக் கூடாக தொழிலாளர்களே நிர்வகித்ததுடன் அனைவருக்கும் சமமான வருமானத்தை சம்பளமாக எடுத்துக்கொண்டு மீதியுள்ள இலாபத்தை மீண்டும் அந்த பொது நிறுவனத்தின் கணக்கில் சேர்த்து அதை விரிவு படுத்தினர்.
GUISEபாரிசில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு நிகரான சமூகப்புரட்சியாக கோடனுடைய இந்த கூட்டுக் குடும்பத்திட்டம் கருதப்பட்டது.பல ஐரோப்பிய நாடுகளில் அடிமை முறையும் சமூக ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படாத-அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமையும் ஆண்களுக்கு நிகராக தொழில் செய்யும் உரிமையும் வழங்கப்படாத அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களை ஒரே குடும்பமாகவும் சமத்துவ மனிதர்களாகவும் மாற்றிய அவரது செயற்பாடு பிரெஞ்சு புரட்சியின் உன்னதமான கோட்பாடுகளான விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுக்கு அhத்தமும் வடிவமும் கொடுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டது.
1888 ம் ஆண்டு கோடான் மறைந்த பின்பு பிரான்சில் நடந்த உள்சாட்டு குழப்பங்களின் தாக்கமும் 20 ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் துறை போட்டி மற்றும் சந்தைக்கான போட்டி அதை தொடாந்து ஏற்பட்ட மதலாம் உலக யுத்தம் என்பவற்றால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவிழக்க ஆரம்பித்து.அடுத்த தலைமுறையில் வந்த பிள்ளைகள் உயர் கல்விகற்று வெளி வேலைகளுக்கு சென்றது, வெளியாரை திருமணம் செய்தது என்பவற்றால் பெருமளவுக்கு அந்த குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
கோடன் ஆரம்பித்து நடத்திய அந்த தொழிற்சாலை கூட இன்று அதே பெயரில் தனியார் நிறுவனமாகி கூட்டுக்குடும்ப பாரிம்பரியத்தை கொண்ட தயாரிப்பு என்ற அடையாளத்துடன் இன்றைய உலகமயமாதல் சந்தையில் தனது பொருட்களை
சந்தைப்படுத்தகிறது.
ஆயினும் இன்னும் பல குடும்பங்கள் தாங்கள் இந்த கூட்டுக் குடும்ப பாரம்பரித்தை சோந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள்