சனி, 2 பிப்ரவரி, 2019

ஒரு அடியாளின் செயற்பாடு எப்படி இருக்கும்?

சிறீலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தனது மகனுக்கு இந்து மதமுறைப்படியும் திருமணம் செய்து வைத்ததை பலரும் ஆச்சரியப்பட தக்க ஒரு செய்தியாக பகிர்ந்துவருகின்றனர்.உண்மையில் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.முதலில் மகிந்த ஒரு நல்ல நடிகர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அடுத்தது மகிந்த ரணிலைப் போல சந்திரிகாவைப் போல பௌத்த சிங்கள பேரினவாதத்தின்நேரடி வாரிசு அல்ல.அவர் அந்த அமைப்பின் விசுவாசமான அடியாள் மட்டுமே.ஒரு அடியாள் தன்னுடைய எசமானர்களுக்கு தன்னுடைய விசுவசத்தை நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வான்.மகிந்தவின் தமிழின அழிப்பு இதன்பாற்பட்டதே.1960 முதல் 80 கள் வரை மகிந்த குடும்பம் சிங்கள அதிகாரவர்க்கத்துக்கு எதிராகவே செயற்பட்டது.சிங்கள அதிகாரவர்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த மகிந்த ஜெனிவாவில் தவமிருந்தது இப்போதைய தலைமுறைக்கு தெரியாது.
ஒரு அடியாளின் செயற்பாடு எப்படி இருக்கும்? என்பதை வைத்துத்தான் நாம் அவரது அசைவுகளை செயல்களை மதிப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக